திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் ஊரடங்கு காரண மாக வெற்றிலை வியாபாரம் மந்த நிலைக்கு சென்றதால் வியாபாரி களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் விழா, சுப நிகழ்ச்சிகள் எது வாக இருந்தாலும் வெற்றிலை கண்டிப் பாக இருக்கும். தமிழகத்தில் குறைந்த முதலீட்டில் சுயதொழில் செய்ப வர்கள் பெரும்பாலும் நடைபாதை யில் வெற்றிலை பாக்கு பெட்டிக் கடை யை தான் தொடங்குவார்கள்.
பிழைக்க வழி இல்லாதவர்கள் வெற்றிலை பாக்கு கடையாவது வைத்து பிழைத்துக் கொள்வேன் என்று கூறிய காலம் ஒன்று உண்டு. கொரோனா தோற்றால் வெற்றிலைப் பாக்கு கடைகள் கூட திறக்க முடியா மல் முடங்கிப் போனது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 200 தெருவோர நடைபாதை பெட்டிக் கடைகள் இயங்கி வருகின்றன. ஆம்பூர் நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வெற்றிலை வியாபாரிகள் உள்ள னர். இவர்களுக்கு மதுரை, திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், திருப் பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெற்றிலைகள் விற்பனைக்கு வரும்.
இவற்றை பெட்டி கடைகளுக்கு அனுப்பியும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தோற்று மக்களிடையே பரவாமல் இருப்பதற்காக மத்திய அரசின் ஊர டங்கும் தமிழக அரசின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பித்து வரும் 17ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவில்கள் மூடப்பட்டன. திருவிழாக்கள் நடை பெறக்கூடாது என தடைவிதிக்கப் பட்டது. திருமணங்கள் எளிய முறை யில் நடத்த வேண்டுமெனவும் அறி விக்கப்பட்டதால் விழாவிற்கு முக்கிய தாம்பலமாக விளங்குவது வெற்றிலை பாக்கு தான்.
ஆம்பூரில் இருந்து சைக்கிளி லேயே சென்று வெற்றிலைகளை ஒரு சில வியாபாரிகள் வாங்கி வருகின்ற னர். அதுவும் விழாக்கள் வெள்ளிக் கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கூட மக்கள் நடமாட்டம் இல்லாத தால் வியாபாரிகள் தினசரி பழுத்த வெற்றிலைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் வெற்றிலை பறிக்கும் தொழிலாளர்கள் பெரு மளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வெற்றிலை பயிரிடப்படுகின்றன. இதில் தினகூலிக் காக 100-க்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் வேலையில்லாமல் தவித்து வரு கின்றனர். நாளொன்றுக்கு நடை பாதை வியாபாரிகள் தினமும் 100 கவுளி மேல் வெற்றிலை வியாபா ரம் செய்து வந்தனர்.
வாணியம்பாடி பகுதியில் வெற்றிலை பறிக்கும் தொழிலாளி சந்தி ரன் கூறுகையில், “தற்போது 10 கவுளி கூட விற்பனை செய்ய முடிய வில்லை” என வேதனையோடு தெரி வித்தார். பல்வேறு தரப்பு வியாபாரி களுக்கு நிவாரணம் வழங்கி வரும் அரசு, வெற்றிலை வியாபாரிகளான எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி கூறுகையில், “ மத்திய மாநில அரசு களின் 144 தடை உத்தரவால் வெற்றிலை தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகள், வியாபாரி கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார் கள். இதனால் வெற்றிலை முழுவதும் தோட்டத்திலேயே பழுத்து உதிரும் நிலையில் உள்ளது. எனவே வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
-ஆம்பூர் முருகேசன்